×

வேலூர் மத்திய சிறையில் முருங்கை தோட்டத்துக்கு தீ வைத்த கும்பல்

வேலூர், மே 25: வேலூர் மத்திய சிறையில் முருங்கை தோட்டத்துக்கு மர்ம கும்பல் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மத்திய சிறையில் 750க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தை கைதிகள் மூலம் சிறைக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச் சுவருக்கு அருகில் கரும்பு, முருங்கை உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகிறது. இதேபோல், 2.5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு ேதாட்டம் அமைக்கப்பட்டுள்ளது. போதிய தண்ணீரின்றி கரும்பு பயிர்கள் காய்ந்து கிடக்கிறது. இதன் அருகில் முருங்கை தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் முருங்கை காய்கள் காய்த்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், முருங்கை தோட்டத்துக்கு மர்ம கும்பல் நேற்று காலை தீ வைத்துள்ளது. தீ மளமளவௌ பரவியதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறை பாதுகாப்பு போலீசார் மற்றும் தோட்டத்தை பராமரிக்கும் சிறைவாசிகள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதற்கிடையில், சுமார் 5 முருங்கை மரங்கள் தீயில் கருகின. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : fire ,Murugai plantation ,Vellore Central Jail ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா