கிருஷ்ணகிரி, மே 23: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் 1ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடந்தது. இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, சிலம்பம், குத்துச்சண்டை மற்றும் வாலிபால் ஆகிய போட்டிகளுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் இலவச பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, தினசரி பயிற்சியின் போது பால் மற்றும் முட்டை இலவசமாக வழங்கப்பட்டது. முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி டிஎஸ்பி பாஸ்கர் பங்கேற்று, பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.