×

வில்லுக்குறி அருகே சித்தர் பீடம் உடைப்பு

திங்கள்சந்தை, மே 22 :வில்லுக்குறி  அருகே மேலப்பாறை கோணத்தில் திருவிடைக்கோடு  சடையப்பனார் பக்தர்கள் கல்வி  அறக்கட்டளை சார்பில் சித்தர் பீடம் அமைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு அங்கு சென்ற மர்ம நபர்கள் சித்தர் பீடத்தை அடித்து   நொறுக்கி வீசி உள்ளனர். இது குறித்து அறக்கட்டளை தலைவர் சதாசிவன்  இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை  நடத்தி வருகின்றனர். சித்தர் பீடத்தை யாராவது குடிபோதையில்  அடித்து  நொறுக்கினார்களா? அல்லது திட்டமிட்ட சதி செயல் ஏதாவது உண்டா? என போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sithar ,villa ,
× RELATED கோடை சீசனை வரவேற்க பூத்து குலுங்குது போகன் வில்லா