காடையாம்பட்டி, மே 15: காடையாம்பட்டி அருகே கொங்குப்பட்டி ஊராட்சி தாசனுர் பகுதியை சேர்ந்த சென்றாயன் மனைவி பச்சியம்மாள் (60). இவரது மகன் மணி (27) வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து வந்தார். இந் நிலையில் தாய் பச்சியம்மாளிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பணம் கொடுக்க மறுத்த அவரது தாயை அடித்து உதைத்துள்ளார்.