போச்சம்பள்ளி, மே 8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளில், அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. குறிப்பாக காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், மருதேரி, செல்லம்பட்டி, பாரூர், மஞ்சமேடு, புங்கம்பட்டி, கீழ்குப்பம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 36 ஆயிரம் ஏக்கரில் 15 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. போச்சம்பள்ளி தேங்காய்க்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது.