ஆத்தூர், மே 3: ஆத்தூர் அருகே, புது ஏரியில் தடுப்புகள் அமைத்து பன்றி வளர்ப்பில் அங்குள்ள சிலர் ஈடுபட்டு வருகின்றனர். ஆத்தூர் ஒன்றியம் தென்னங்குடிபாளையம் கிராமத்தில், பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவின் பராமரிப்பில் 300 ஏக்கர் பரப்பளவில் புது ஏரி உள்ளது. இந்த ஏரியின் உட்பகுதியில் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சிலர் தடுப்புகளை அமைத்து பன்றிகளை வளர்த்து வருகிறார்கள். இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும்போது பாதிப்பு ஏற்படும். தற்போது ஏரியில் ஆக்கிரமிப்பு இல்லாத நிலையில் இவர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை போல் வேறு ஆட்களின் ஆக்கிரமிப்பு உருவாகும் அபாயமுள்ளது.