சென்னை, ஏப். 30: தரமணி கம்பர் தெரு, பெரியார் நகர் அருகே சில வாலிபர்கள் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தரமணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசிய சோதனை நடத்தினர். அப்போது, வாலிபர்கள் சிலர் கஞ்சா வைத்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக போலீசார் அவர்களை பிடித்தபோது, மஞ்சள் நிற பையில் கஞ்சாவை விற்பனை செய்ய, சிறு சிறு பொட்டலங்களாக கட்டி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை கைப்பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டதில் 10.10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, திரிபுராவை சேர்ந்த ஜமீன் உசைன் (28), நூர் ஆலம் மியா (30), சாதிக் மியா (30) அஜித்குமார் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.