புழல்: செங்குன்றம் அடுத்த நல்லூரில் உள்ள சுங்கச்சாவடியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், புழலில் இருந்து நேற்று முன்தினம் காலை கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் நல்லூர் சுங்கச்சாவடிக்கு வந்தது.
அப்போது அதிக கட்டணம் வசூலித்ததால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வேனில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, வேன் டிரைவர் பன்னீர் (34), உரிமையாளர் ஜேம்ஸ் (40) ஆகிய இருவரையும், சுங்கச்சாவடி ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர்.