×

பெண்ணை தாக்கியவர் கைது

உளுந்தூர்பேட்டை, ஏப். 24: உளுந்தூர்பேட்டை அருகே பா.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர் மனைவி சின்னப்பொண்ணு(53). சம்பவத்தன்று இவர் தனது நிலத்தில் இருந்த போது, இதே கிராமத்தை சேர்ந்த குமார்(40), இவருடைய மனைவி குமாரி(30) ஆகியோர் மாடுகளை நெல் வயலில் விட்டு மேய்த்து உள்ளனர். இது குறித்து சின்னப்பொண்ணு கேட்டதற்கு இரண்டு பேரும் அவரை அசிங்கமாக திட்டி தாக்கி உள்ளனர். இது தொடர்பாக திருநாவலூர் காவல்நிலையத்தில் சின்னப்பொண்ணு கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் 2 பேர் மீதும் வழக்கு பதிந்து அதில் குமாரை கைது செய்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை