தாரமங்கலம், ஏப்.24: தாரமங்கலம் அருகே கணவர் விவாகரத்து ேநாட்டீஸ் அனுப்பியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் சங்ககிரி மெயின்ரோடு தபால்நிலையம் பகுதியை சேர்ந்தவர் கீதாலட்சுமி (54). கணவர் இறந்து விட்டார். இவருக்கு தமிழ்செல்வி (25) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன், தமிழ்செல்வியை அதே பகுதியை சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டரான வெங்கடேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். வெங்கடேஷ்க்கு ஊதியம் குறைவாக வருவதால், தமிழ்செல்வியிடம் அவரது தாய் வீட்டில் இருந்து ₹10 லட்சம் பணம் வாங்கி வருமாறும், அதனை வைத்து சொந்தமாக தொழில் தொடங்குவதாகவும் கூறியுள்ளார். இதனால் தமிழ்செல்விக்கும் வெங்கடேசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கடந்த 2 மாதத்திற்கு முன் நடந்த தகராறில் தமிழ்செல்வி வெங்கடேஷை விட்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.