×

மீனாட்சி சொக்கநாதர் பெருமான் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி, ஏப். 22: செஞ்சி வட்டம் செத்தவரை, நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள மீனாட்சி உடனுறை சொக்கநாதர் பெருமான் கோயில் சித்திரை பிரமோற்சவ விழாவை முன்னிட்டு மீனாட்சி உடனுறை சொக்க
நாதர் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவ விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு தினமும் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் உற்சவம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி சொக்கநாதர் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி மீனாட்சி உடனுறை சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, மலர் அலங்காரம் ஆகியவை நடைபெற்றது.  திருக்கல்யாணத்தை முன்னிட்டு நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராம மக்கள் மீனாட்சி அம்மனுக்கும் மற்றும் செத்தவரை கிராம மக்கள் சொக்கநாதபெருமானுக்கும் மேளதாளங்களுடன் சீர் வரிசையை கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தை செத்தவரை சிவஜோதி மோனசித்தர் சுவாமிகள் முன்னிலையில் சிவசெல்வதுரை நடத்தி வைத்தார். இதில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Meenakshi Kokkanathar Peruman ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை