×

திருவண்ணாமலையில் பக்தரிடம் ஜேப்படி செய்த பெண் பிடிபட்டார்

திருவண்ணாமலை, ஏப்.21: திருவண்ணாமலையில் பக்தரிடம் பணம் ஜேப்படி செய்த பெண் பிடிபட்டார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை புதுவாணியங்குளம் 8வது தெருவை சேர்ந்தவர் விஜயக்குமார்(40). இவரது மனைவி மீரா(37). இவர் நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரகுளம் அருகே சுவாமி தரிசனம் செய்துக்கொண்டு இருந்தார். அப்போது அவரது கையில் இருந்த மணிபர்சை பிடுங்கிக்கொண்டு ஒரு பெண் ஓடினார். இதை பார்த்த மீரா `திருடன், திருடன்'''' என்று கூச்சலிட்டார்.

இதை கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்து திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருக்கோயிலூரை சேர்ந்த வெங்கடேசன் மனைவி லட்சுமி(32) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் மணிபர்சில் இருந்த 300ஐ கைப்பற்றினர்.

Tags : Tiruvannamalai ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...