பூத் சிலிப்பில் பெண்ணுக்கு பதில் ஆண் பெயர் வாக்களிக்க அனுமதிக்காததால் ஏமாற்றம்

ஊத்தங்கரை, ஏப்.19: ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அமுதா. இவர் நேற்று காரப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட சென்றார். அப்போது அந்த வாக்குச்சாவடி முகப்பில் இருந்த தேர்தல் பணி அலுவலர்கள், பூத் சிலிப் கொடுத்தனர். அந்த பூத் சிலிப்பில், அமுதாவின் பெயருக்கு பதில் சண்முக முதலியார் மகன் சீனிவாசன்  என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வாக்காளர் அடையாள அட்டை  மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை, அதிகாரிகளிடம் காண்பித்து வாக்களிக்க அனுமதிக்கும்படி கேட்டார். ஆனால், வாக்காளர் பட்டியலில் தவறான தகவல் சேர்க்கப்பட்டு உள்ளது என தெரிவித்த அதிகாரிகள், வாக்களிக்க அனுமதிக்க முடியாது என கூறினர். இதனால், வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் அமுதா திரும்பிச்சென்றார்.

Related Stories: