சென்னை: மதுரவாயல், மேட்டுகுப்பம், மெயின் ரோடு, மின்வாரிய அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜ்கமல் தலைமையில் நேற்று வாகன சோதனை நடந்தது.அப்போது, அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி சோதனை நடத்தினர். அதில் வந்த பிரசாந்த் (22) என்பவரிடம் ₹66 லட்சத்து 74 ஆயிரம் இருந்தது. அந்த பணம் தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், முறையான ஆவணம் இல்லை எனவும் தெரிய வந்தது.இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து வளசரவாக்கம் மண்டல அலுவலக தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் பூந்தமல்லி அரசு கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.