சென்னை: போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்திய ஆட்டோவை ஓரமாக நிறுத்தும்படி கூறியதால், ஆத்திரமடைந்த டிரைவர் ஒருவர், போலீஸ்காரரை தாக்கிய சம்பவம் வடபழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வடபழனி பேருந்து நிலையம் முன், பேருந்துகள் வெளியே செல்ல முடியாத வகையில் ஆட்டோ ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, வடபழனி காவல் நிலைய போலீஸ்காரர் லோகநாதன் (31) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர், போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தப்பட்ட ஆட்டோவை ஓரமாக நிறுத்துமாறு அதன் டிரைவர் செந்தில்குமாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், ஆட்டோ ஓரமாகத்தான் நிறுத்தப்பட்டிருக்கிறது.