சென்னை: காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள பிரபல தனியார் கூரியர் நிறுவனம் மூலம் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு வந்த பொருட்கள் டெலிவரி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்ைல, என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் நிர்வாகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட நிர்வாகம், பொருட்கள் திருடப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். எனவே தனியார் கூரியர் நிறுவனம் சார்பில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.