ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் தனியார் வங்கி மற்றும் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்து வந்த 2 பேர், இந்த ஏடிஎம் மையத்துக்குள் புகுந்து, பணத்தை கொள்ளையடிப்பதற்காக இயந்திரத்தை கழற்றியுள்ளனர். மின் வயரையும் துண்டித்துள்ளனர். ஆனால், அவர்களால் ஏடிஎம்மில் உள்ள பணத்தை எடுக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் பணம் எடுக்க வந்த ஒருவர், ஏடிஎம் மெஷின் கழற்றப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மணலி புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: