சேந்தமங்கலம், ஏப்.4: சேந்தமங்கலத்தில் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் பண்டிகையையொட்டி புதன்சந்தையில் ஆடுகள் விலை அதிகரித்தது.நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில், புதன்கிழமை தோறும் ஆட்டுச்சந்தையும் கூடுவது வழக்கம். சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து ஏராளமான ஆடுகள், குட்டிகள், கிடாக்கள் விற்பனைக்கு வரும். இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருகின்றனர். வறட்சி தொடங்கிய நிலையில், நேற்று கூடிய ஆட்டுச்சந்தையில் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது.