சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தை சேர்ந்த பெண் மாசிலாமணி (46) ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: காரைக்குடியை சேர்ந்த நான், கடந்த 1991ம் ஆண்டு கணவர் பாண்டிச்சாமியுடன் சென்னையில் குடியேறினேன். எங்களுக்கு மாங்காட்டில் 2053 சதுர அடி நிலம் உள்ளது. சாலிகிராமம் பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் அவரது தந்தை டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் எங்களை சந்தித்தனர். அப்போது, எங்கள் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்யலாம் என்றும் கட்டிடம் கட்டிய பிறகு இருவரும் சமமாக பிரித்து கொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பி, எங்கள் நிலத்திற்கான பொது அதிகாரம் பத்திரத்தில் கையெழுத்து போட்டோம். பின்னர் எங்களிடம் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தனர். ஒரு மாதம் கழித்து எங்கள் சொத்தை நவீன் அவரது தந்தை சுப்பிரமணியன் பெயரில் மாற்றி எழுதிக்கொண்டனர்.