பள்ளி மாணவி கடத்தல்

அண்ணாநகர்:அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (40). ஷேர் ஆட்டோ டிரைவர். இவரது மகள் அமைந்தகரையில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி மதியம் 12 மணிக்கு கடைக்கு சென்று வருவதாக கூறிய மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மகளை காணவில்லை என பெற்றோர் அமைந்தகரை போலீசில் புகார் அளித்தனர்.

புகாரில், ‘வடமாநிலத்தை சேர்ந்த ஜாகிர் என்கிற நபர் தனது மகளை கடத்தி இருக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வழக்குப்பதிவு செய்து 12 நாள் ஆகியும் போலீசார்  பள்ளி மாணவியை தேடாமல் அலட்சியம் செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கேட்டு கொண்டுள்ளனர்.

Related Stories: