அண்ணாநகர்:அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (40). ஷேர் ஆட்டோ டிரைவர். இவரது மகள் அமைந்தகரையில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி மதியம் 12 மணிக்கு கடைக்கு சென்று வருவதாக கூறிய மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மகளை காணவில்லை என பெற்றோர் அமைந்தகரை போலீசில் புகார் அளித்தனர்.