×

சாலையில் உலர்த்தப்படும் தானியங்கள்

ரிஷிவந்தியம், மார்ச் 26: ரிஷிவந்தியம் அடுத்து ஜம்படை கிராமம் உள்ளது. இங்கு கம்பு, சோளம், எள், கேழ்வரகு ஆகிய தானியங்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விளையும் தானியங்களை விவசாயிகள் களத்தில் உலர்த்தாமல் ஜம்படை சாலையில் உலர்த்துகின்றனர். இந்த சாலை வழியாக திருவரங்கம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரெங்கநாதபெருமாள் கோயில் உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை இருசக்கரம், நான்கு சக்கர வாகனத்தில் தரிசித்து வருகின்றனர். சாலையில் தானியங்களை உலர்த்துவது மட்டுமல்லாமல் கருங்கல் வைத்துள்ளதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு  விபத்து ஏற்படுகின்றது. ஆகையால் காவல்துறையினர் விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி