×

வியாபாரியிடம் ₹2.60 லட்சம் பறிமுதல்

கடலூர், மார்ச் 26: வாகன தணிக்கையின் போது வியாபாரியிடமிருந்து ரூ.2.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. இதில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுகிறது. கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் பறக்கும் படை தாசில்தார் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி சென்ற சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர். அப்போது ரூ.2.60 லட்சம் பணத்தை ஆந்திராவை சேர்ந்த சுதீர்குமார் என்ற வியாபாரி கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை நடத்திய போது பணத்துக்கு உரிய ஆவணம் காட்டவில்லை. இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் ரூ.2.60 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை