சென்னை: ஆளும்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, என்று தயாநிதி மாறன் குற்றம்சாட்டி உள்ளார்.வடசென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் பகுதி திமுக சார்பில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் புளியந்தோப்பு படாளம் பகுதியில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஆளும்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. திமுக வெற்றியை தடுக்கும் விதமாக செயல்படுகிறது. நமது வெற்றி பிரகாசமாக உள்ளது. மோடி அரசு, பண மதிப்பிழப்பு செய்த பிறகு பணத்தை மாற்றுவதற்கு ஒவ்வொருவரும் வங்கி வாசலில் காத்துக் கிடந்தோம். காஸ் விலை, பெட்ரோல் விலை உயர்வால் தினசரி கஷ்டப்பட்டு வருகிறோம்.