×

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 6 பேர் சரண்

பெரியகுளம், மார்ச் 22: ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 6 பேர் பெரியகுளம் கோர்ட்டில் சரணடைந்தனர். திண்டுக்கல் ஆட்டோ டிரைவர் கார்த்திக் கொலை வழக்கில் தொடர்புடைய பாண்டி(33), பிரான்சிஸ் சேவியர்(25), சேகர் என்ற சந்திரசேகர்(26), ஜெயபாண்டி(27), ராதாகிருஷ்ணன்(33), மனோஜ்(30) ஆகிய 6 பேரும், பெரியகுளம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்கள் 6 பேரையும் மதுரை வாடிப்பட்டி காவல்துறையினரிடம் வழக்கு விசாரணைக்காக ஒப்படைக்க நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார்.



Tags : Auto Driver ,
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...