×

காணாமல் போன 5 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு

ரிஷிவந்தியம், மார்ச் 22: ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் மகள் சுகன்யா (16), பாலசுப்ரமணியன் மகள் கலையரசி (19) ஆகிய இருவரும் கடந்த 17ம் தேதி குடி தண்ணீர் பிடிக்க செல்லும் போது வழியில் சுமார் 1.5 லட்சம் மதிப்பில்  5 பவுன் தங்க நகை கீழே கிடந்துள்ளது. இதனை சுகன்யா, கலையரசி ஆகிய இருவரும் ரிஷிவந்தியம் காவல்நிலையத்தில் ஓப்படைத்தனர். இதயடுத்து, ரிஷிவந்தியம் காவல்நிலைய சப்- இன்ஸபெக்டர் மாணிக்கராஜா விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த ஹசேன் மனைவி மெகரூன் (42) என்பவருடைய நகை காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று மெகரூனிடம் நகையை ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை