×

வைக்கோல் லாரி எரிந்து நாசம்

தென்காசி, மார்ச் 22: கேரளமாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஆரிபா என்பவரது லாரியில் நெல்லை மாவட்டம் வீகேபுதூரில் இருந்து வைக்கோல் ஏற்றிவிட்டு கேரளாவுக்கு சென்றது. லாரியை  செங்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஓட்டினார். லாரி தென்காசி அடுத்த கண்டமங்கலம் பகுதியில் செல்லும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் வைக்கோலில் தீப்பிடித்தது.  தகவலறிந்த தென்காசி, சுரண்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் வைக்கோல், லாரி எரிந்து நாசமானது. இதுகுறித்து குற்றாலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது