அண்ணாநகர்: சென்னை முகப்பேர் மேற்கு 2வது பிரதான சாலையில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான 2 அடுக்குமாடி கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் ஓட்டல், பழக்கடை, சூப்பர்மார்க்கெட், அழகு நிலையம் உள்பட 7 கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் வணிக வளாகத்தில நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மின்கசிவு ஏற்பட்டு திடீர் விபத்து ஏற்பட்டது. இதில், வணிக வளாகத்தில் உள்ள 7 கடைகளும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கோயம்பேடு, அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினர்.