×

இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை, மார்ச் 21:  உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் லாசர்சின்னப்பன்(29). இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த ஏசுராஜ் மகன் சார்லஸ்ஆரோக்கியராஜ் என்பவருக்கும் இடையே சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் அசிங்கமாக திட்டி தாக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் லாசர்சின்னப்பன் கொடுத்த புகாரின் பேரில் சார்லஸ்ஆரோக்கியராஜ், பன்ராஜ், மில்க்யூர், டார்வின் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிந்து, அதில் சார்லஸ்ஆரோக்கியராஜை கைது செய்தனர்.இதே பிரச்னை தொடர்பாக சார்லஸ் ஆரோக்கியராஜ் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் ஜான்போஸ்கோ, கபிரியேல்(24), மரியசாமி, அந்தோணியம்மாள் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிந்து, அதில் கபிரியேலை கைது செய்தனர்.

Tags : persons ,
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...