மன்னார்குடி, மார்ச்.19: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலு வலகத்தில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கூட்டணி யில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, புதிய தமிழகம் கட்சிகளை சேர்ந்த நிர் வாகிகள் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தஞ்சை, நாகை பாராளு மன்ற தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு உறுதுணையாக தேர்தல் பணியாற்றுவோம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் கூறி ஆதரவு தெரிவித்தனர். இதில் பாஜக சார்பில் திருவாரூர் மாவட்ட தலைவர் பேட்டை சிவா, பாமக சார்பில் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன், தெற்கு மா வட்ட செயலாளர் பாலு, புதிய தமிழகம் சார்பில் திருவாரூர் மாவட்ட செய லாளர் நாகராஜன், நாகை மாவட்ட செயலாளர் முத்தழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் கூட்டத்தின் போது கருவாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அமமுக பிரமுகர் முன்னாள் கவுன்சிலர் மனோகரன் என்பவர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் காமராஜ் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைந்தார்.