பறக்கும் ரயில் நிலைய மின்கம்பியில் ஏறிய மாணவன் மீது மின்சாரம் பாய்ந்தது

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி ஆச்சாரி முத்து நகரை சேர்ந்தவர் அருள் (15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். மேலும் வீட்டில் புறா மற்றும் குருவிகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் வளர்த்த புறா நேற்று காணாமல் போயிருந்தது. இதையடுத்து புறாவை தேடிச்சென்ற மாணவர் புறா அப்பகுதியில் உள்ள திருவல்லிக்ேகணி பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள மின்கம்பிகள் மீது அமர்ந்திருப்பதை கண்டு மாணவர் மின்சார கம்பிகள் மீது ஏறி புறாவை எடுக்க முயற்சி செய்த போது மின்சாரம் பாய்ந்து அப்பகுதியில் உள்ள கால்வாயில் தூக்கி வீசப்பட்டார்.

இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருவான்மியூர் ரயில்வே  போலீசார் விரைந்து வந்து மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்த மாணவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் 53 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: