அங்காளம்மன் கோயிலில் அன்னதானம்

ஓசூர், மார்ச் 8:  ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியில் அங்காள பரமேஷ்வரி அம்மன் கோயில் விழா மற்றும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆண், பெண் பக்தர்கள் அக்னி மற்றும் பூங்கரகம் எடுத்து வந்து தீ மிதித்தனர். இதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. மாசாணி அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: