மேட்டூர், மார்ச் 7: மேட்டூர் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால், புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். மேட்டூர் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பகைள், நகராட்சிக்கு உட்பட்ட சர்கார் தோட்டம் என்ற பகுதியில், குவித்து வைக்கப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாததால் குப்பைகளை மறுசுழற்சி செய்ய முடியாமல் உள்ளது. ஆனாலும், அவ்வப்போது நகராட்சி ஊழியர்கள், பொதுமக்களில் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பது வழக்கம். நேற்று பிற்பகல், சேகரித்து வைக்கப்பட்ட குப்பையில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் ஒரே புகை மூட்டமாக மாறியது.