சென்னை: மதுரவாயல் ஆலப்பாக்கம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). இவர், கடந்த 25ம் தேதி குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். வீட்டை திறந்து உள்ளே சென்றபோது பொருட்கள் சிதறி கிடந்தன. படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, பீரோவை திறந்து அதில் வைத்து இருந்த 10 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. வீட்டின் படுக்கை அறையில் ஏசி மெஷின் பொருத்தி இருந்த ஓட்டையை தற்காலிகமாக அடைத்துள்ளனர்.