ஆவடி, பிப்.27: ஆவடியில் உள்ள பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 5மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். அதில் ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
பல்லாவரம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் ஜெயந்தி. இவர், கட்டிட உரிமம் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுப்படுவதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து, கடந்த மாதம் 10ம் தேதி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் போலீசார், பல்லாவரம் நகராட்சியில் உள்ள ஜெயந்தி அறையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது அறையில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை போலீசார் கைப்பற்றினர். பின்னர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் போலீசாரிடம் பணம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அத்துறையின் நகராட்சி உயர் அதிகாரியிடம் விசாரணை நடத்தினர். இதில், 60க்கும் மேற்பட்ட கட்டிட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான கோப்புகளை கைப்பற்றினர்.