தாம்பரம்: தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஆர்.டி.ஓ துரை, நிலை ஒன்று ஆய்வாளர் செல்வி, நிலை இரண்டு ஆய்வாளர் னிவாஸ் உட்பட அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுக்கென தனித்தனியாக புரோக்கர்களை வைத்துக் கொண்டு, ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு வரும் பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில் சுமார் 33 ஓட்டுநர் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு சில ஓட்டுநர் பயிற்சி மையங்களை தவிர பெரும்பாலான ஓட்டுநர் பயிற்சி மையங்கள் வீதிமீறி செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து தாம்பரம் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தி நேற்றைய தினகரன் நாளிதழில் வெளியானது.