×

குழித்துறை நீதிமன்றத்தில் இன்று பிஎஸ்என்எல் லோக் அதாலத்

நாகர்கோவில், பிப்.22: நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் சஜிகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் தரைவழி இணைப்பு பெற்று கட்டண பாக்கி காரணமாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள தக்கலை, ஆளூர், மணக்காவிளை, திருவிதாங்கோடு, வில்லுக்குறி, குலசேகரம், காட்டாத்துறை, நெய்யூர், குளச்சல், கருங்கல், முட்டம், அருமனை, செறுவல்லூர், கடையாலுமூடு, களியக்காவிளை, கொல்லங்கோடு, குழித்துறை, லோயர் கோதையாறு, மார்த்தாண்டம்,மூவோட்டுக்கோணம், பைங்குளம், பத்துக்காணி, தேங்காய்ப்பட்டணம், திருவட்டார் ஆகிய பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் விதிகளுக்கு உட்பட்டு உரிய தள்ளுபடி பெற்றுக்கொண்டு, பாக்கி தொகையை தீர்வு செய்வதற்கும், தேவையானால் மறு இணைப்பு பெற்று கொள்ளவும் “லோக் அதாலத்” நிகழ்ச்சி குழித்துறை நீதிமன்றத்தில் இன்று (22ம் தேதி)  காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெற உள்ளது.
வாடிக்கையாளர்கள் இவ்வாய்ப்பினை பயன் படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு நாகர்கோவில் தொலைத் தொடர்பு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது. பாக்கி தொகை தீர்வு செய்யப்படவில்லை எனில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்  செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : BSNL Lok Adalath ,Kurian Court ,
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...