×

அரசு பஸ் டிரைவர் தற்கொலை

பூதப்பாண்டி: பூதப்பாண்டியை அடுத்த துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம்பிள்ளை (46). நாகர்கோவில் ராணித் தோட்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சண்முகம்பிள்ளை கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இருப்பினும் உடல்நலம் சரியாகாததால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் தான் சாப்பிடும் மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த சண்முகம்பிள்ளையை குடும்பத்தினர் பூதப்பாண்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சண்முகம்பிள்ளை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து மனைவி மீனாட்சி பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Government ,Bus Driver ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...