அரியலூர், பிப்,20: மாசிமகத்தை முன்னிட்டு திருமானூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.அரியலூர் மாவட்டம், திருமானூரில், மாசிமகப் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு அரசின் அனுமதி பெற்று திருமானூரில் நடராஜ வீதியில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. முன்னதாக காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோயிலிலிருந்து சீர் வரிசை எடுத்துவரப்பட்டு வாடிவாசலிருந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.
ஜல்லிகட்டில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டத்திலிருந்து 500 காளைகள் பங்கு பெற்றன. 200 ஜல்லிகட்டு வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கியவர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, பேன், வெள்ளிகாசு, சில்வா ஆண்ட, சேர், ஷோபா, சைக்கிள் போன்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.