×

விளைச்சல் அதிகம் விலையில்லாமல் வீழ்ந்தது சவ்சவ் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு, பிப்.14: மயிலாடும்பாறை அருகே விளைச்சல் அதிகமானதால் சவ்சவ் விலை குறைந்துள்ளது. இதனால் நஷ்டமடைந்த தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மயிலாடும்பாறை அருகே கருப்பையாபுரம் கிராமத்தில் சவ்சவ் (சொச்சக்காய்) விவசாயம் பரவலாக நடைபெற்று வருகிறது. இங்கிருந்து விருதுநகர், தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை போன்ற நகரங்களுக்கு காய் அனுப்பப்படுகிறது. தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ,8லிருந்து 9 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. விளைச்சல் அதிகமாக இருந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் சவ்சவ் விவசாயம் செய்வது இதுவே முதல்முறையாகும். விளைச்சல் அதிகமாக இருக்கிறது. ஆனால் விலை கிடைக்கவில்லை. கடன் வாங்கித்தான் விவசாயம் செய்து வருகிறோம். எனவே, இப்பகுதியில் சௌ சௌ காய்கறி விளைச்சலில் நஷ்டமைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு