17 வயது மாணவி கடத்தல் உடந்தையாக இருந்த வாலிபர் கைது

போச்சம்பள்ளி, பிப்.8:   மத்தூர் அருகே மஞ்சுப்பட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் தெரிவித்தார். அதில், தர்மதோப்பு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(30) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.  இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். அதே வேளையில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, தர்மதோப்பு பகுதியைச் சேர்ந்த அம்பேத்குமார்(24) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் கடத்தப்பட்ட மாணவி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: