சேலம், பிப் 6: சேலத்தில் நடந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில், கால்களால் மாற்றுத்திறனாளி மாணவர் ஓவியம் வரைந்தது பார்வையாளர்களின் கவனத்ைத வெகுவாக ஈர்த்தது. சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நேற்று முன்தினம் வலசையூர் அரசுப்பள்ளியில் ஓவியப்போட்டி நடந்தது. இப்போட்டியில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை மாணவர்கள் வரைந்தனர். இந்த நிகழ்ச்சியில் அதே பள்ளியில் படிக்கும் 9ம்வகுப்பு மாணவர் ராஜா, கால்களால் ஓவியம் வரைந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் கவனத்தை ெவகுவாக ஈர்த்தது. கால்களால் இயல்பாக 2 ஓவியங்களை அவர், வரைந்தது கண்டு அனைவரும் பாராட்டினர். இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுைகயில், ‘‘மாணவர் ராஜாவின் 2கைகளும் செயலிழந்த நிலையில் உள்ளது. அயோத்தியாப்பட்டிணத்தில் உள்ள கருணை இல்லத்தில் தங்கியிருந்து வலசையூர் பள்ளியில் படித்து வருகிறார். வாய் பேச முடியாது, காதும் கேட்காது.