சென்னை, பிப். 5: பள்ளிகளுக்கு விளையாட்டு பொருட்கள் கொள்முதல் செய்ததில் ₹10 லட்சம் முறைகேடு செய்தாக சென்னை மாநகராட்சியின் விளையாட்டு துறை அலுவலர் ஒருவரை சஸ்பெண்ட் செய்து ஆணையர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு பிறிப்பித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் கட்டுபாட்டில் 200க்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இதைத் தவிர்த்து மாநகராட்சி பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மைதானங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவது, பல்வேறு விளையாட்டு பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி கல்வித் துறையால் செய்யப்படும். உடற்பயிற்சி கூடத்திற்கான உபகரணங்களும் கொள்முதல் செய்யப்படும்.