துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் மேடவாக்கம் சாலை எல்காட் அவென்யூவில் தனியார் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஊழியர்கள் கணினிக்கு ஒரு இ-மெயில் வந்திருந்தது. அதில் சையத் இப்ராகிம் என்பவர், ‘‘நாங்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம். அடுத்த 6 மணி நேரத்தில் இருந்து 7 மணி நேரத்திற்குள் அந்த குண்டு வெடித்து கட்டிடமே தரைமட்டமாக போகிறது. ஊழியர்கள் அனைவரும் வெளியேறி உயிர் பிழைத்து கொள்ளுங்கள்’’ என குறிப்பிட்டு இருந்தது.