ஊத்தங்கரை, ஜன.25: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடி பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன்(50). விவசாயியான இவர், அதே பகுதியில், சுப்ரமணி என்பவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் தோட்டத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார். விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை ஒட்டி சென்றபோது, டூவீலருடன் தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர்.