சென்னை, ஜன. 23: திருத்தணி அடுத்த பொம்மராஜிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் தீபிகா (3). நேற்று முன்தினம் மாலை, வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த தீபிகா திடீரென மாயமானாள். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் சென்று தேடினர். ஆனால், சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதையடுத்து அப்பகுதி முழுவதும் தேடினர்.அப்போது, வீட்டின் அருகே உள்ள திறந்தநிலை தண்ணீர் தொட்டியில் தீபிகா இறந்துகிடந்தது தெரிந்தது. சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.