×

நத்தம் அருகே டூவீலரில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி

நத்தம், ஜன. 22: நத்தம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியானார். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே பெருமாள்கோயில்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(24). இவர் துவரங்குறிச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது தம்பி கணபதி (21) டூவீலரை ஓட்டிச் செல்ல அவருக்கு பின்னால் செல்வக்குமார் அமர்ந்து சென்றார். இவர்கள் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு துவரங்குறிச்சிக்கு வேலைக்கு கோபால்பட்டி வழியாக டூவீலரில் சென்றனர்.

அப்போது உலுப்பகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள வளைவில் டூவீலர் சென்றபோது நத்தம் பகுதியிலிருந்து பழநிக்கு சென்ற அரசு பேருந்து டூவீலரில் மோதியதில் செல்வக்குமார் சம்பவ இடத்தில் பலியானார். கணபதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான செல்வக்குமாருக்கு திருமணமாகி வினோதினி என்ற மனைவியும் 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

Tags : towail ,Natham ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...