×

சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி

நிலக்கோட்டை, ஏப். 27: நிலக்கோட்டை அருகே உள்ள பொட்டிசெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகுரு(38). வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வத்தலக்குண்டுவில் இருந்து கொடைரோடு நோக்கி டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்றவர் மீது பாலகுருவின் டூவீலர் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பாலகுரு தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாலையில் நடந்து சென்றவரும் விபத்தில் காயமடைந்தார்.

அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலகுருவின் உடலை நிலக்கோட்டை போலீசார் மீட்டு உடல்கூறாய்வுக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Balaguru ,Potishettipatti ,Vatthalakundu ,Wattalakundu ,Kodairod ,Dinakaran ,
× RELATED காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்