×

தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

 

பழநி, ஏப்.26: பழநி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன்(34). மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. இவரையும், இவரது தாயாரையும் கடந்த 22ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தகராறில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெய்வேந்திரன் தரப்பினர் பழநி தாலுகா போலீசில் புகார் செய்தனர். இவரது புகாரின் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பழநி தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங், ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி உள்ளிட்ட போராட்டக்காரர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

The post தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Deivaendra ,Balasamudra ,Deivendran ,taluka ,Dinakaran ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை