×

முன்விரோதத்தில் தாக்குதல்: தம்பதி கைது

திருக்கோவிலூர், ஜன. 22:  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி ஜோதி (50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஜோதியின் நிலத்தில் இருந்த கொய்யா மரத்தில் மணியின் மனைவி உண்ணாமலை பழம் பறித்துள்ளார். இதனை அவரது கணவர் ெஜயராமன் தட்டிக் கேட்டபோது, மணி மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டியுள்ளனர். நடந்த சம்பவத்தை ஜெயராமன் தனது மனைவியிடம் சென்று கூறிக்ெகாண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மணி, அவரது மனைவி உண்ணாமலை, முனியன் மனைவி புஷ்பா ஆகிய 3 பேரும் சேர்ந்து ஜோதி, அவரது கணவர் ஜெயராமன், மருமகள் குமாரி ஆகியோரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த ஜோதி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் புஷ்பா, மணி, உண்ணாமலை ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து மணி, உண்ணாமலை ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : attack ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...