×

தென்காசி பள்ளியில் முப்பெரும் விழா

தென்காசி, ஜன.22: தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா, பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.  விழாவிற்கு செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து 740 மாணவிகளுக்கு தமிழக அரசின் மிதிவண்டி மற்றும் கடந்த கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார். முன்னதாக தலைமையாசிரியை லோகநாயகி வரவேற்றார். முதுகலை ஆசிரியர் புஷ்பராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். இடைநிலை ஆசிரியை அமலாஜான் தொகுத்து வழங்கினார்.

விழாவில் அதிமுக நகர செயலாளர் சுடலை, மாநில பொதுக்குழு கசமுத்து, நகர நிர்வாகிகள் வெள்ளப்பாண்டி, கிருஷ்ணமூர்த்தி, சாமி, ஆறுமுகசாமி, பூக்கடை சரவணன், அரசு வழக்கறிஞர் சின்னத்துரை, முத்துக்குமாரசாமி, பட்டுபூச்சி பீர்முகம்மது, சைரஸ், குணம், அமல்ராஜ், ரமேஷ், ஆடிட்டர் பவானி, வைகைகுமார், ஜெயராஜ் ஸ்டீபன், வெங்கடேஸ்வரன், விஏஓ திருப்பதி உட்பட அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முதுகலை ஆசிரியை ராணிலதா நன்றி கூறினார்

Tags : festival ,school ,Tenkasi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...